top of page

At our church, we welcome you with open arms and invite you to join us in worship and fellowship. Our community is built on love, compassion, and faith, and we look forward to sharing it with you.

ph8.jpg

Our Mission

We believe in free education and accessible healthcare for all. Join us in empowering communities.

ph2.jpg

Join us to worship lord Jesus Christ

Sunday
Morning Service: From 7.00 am to 9.30 am

Evening Service: From 7.00 pm to 8.30 pm

From Our Pastor's Diary

1

சிலுவையை பற்றி ...

அண்டினேன் சிலுவையை அன்பு கிடைத்தது !

சந்தித்தேன் சிலுவையை சந்தோஷம் கிடைத்தது !

சார்ந்துவிட்டேன் சிலுவையை சமாதானம் கிடைத்தது !
நினைத்தேன் சிலுவையை நீடிய பொறுமை கிடைத்தது !
தழுவினேன் சிலுவையை தயவு கிடைத்தது !

நாடினேன் சிலுவையை நற்குணம் கிடைத்தது !

விவரித்தேன் சிலுவையை விசுவாசம் கிடைத்தது!!

உண்மையென சாதித்தேன் சிலுவையை சாந்தம் இடைத்தது !
என்னை இணைத்தேன் சிலுவையொடு இச்சையடக்கம் கிடைத்தது !
இத்தனையும் ஈந்திட்ட என் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டேன் .

2

உலகம் பார்க்கும் பார்வை உறுத்தலாம் உன்னை உலரிவிடாதே நீ பாவியென்று !

அறிந்தோரும் உன்னை அறியாதோர் போல் காட்டலாம் அழுதுவிடாதே நீ அனைவரின்முன் !

பழகியதும் அழுகியதாய் போகலாம் பதட்டப்படாதே பலரின்முன் !
நியமித்த ஓட்டம் உண்டு நிற்காமல் ஓடு !
உன்னை நியமித்தவர் நீதிபரர் நிற்கவைத்தவர் நியாயதிபதி!
நின்றுவிடாதே நிலையில்லாதோரைகண் டு .

aaron-burden-xG8IQMqMITM-unsplash.jpg

3

கிறிஸ்துவின் பிறப்பின் சிறப்பு .

படைத்தவரின் படைப்பைப் பார்த்துக்கொள்ள படைத்தாய் பாவமறியா மனிதனை ! பகுத்தறிவில்லாத மனிதன் தேடி கொண்டான் பொல்லாத வினைதனை ! பட்டுப்போல பார்த்தாய் அவனை அங்கே அன்று பாவி மனிதனை காணாமல் தேடி சென்றாய் எங்கே என்று !
ஒளி வீசக்கூடியவன் ஒளிந்துக்கொண்டான் ஒன்றும் அறியாத மனிதன் அறிந்துக்கொண்டான்..

கொதித்தது உன் கோபம் உச்சக்கட்டம் சிதைந்தது உனது மேலான திட்டம் பொறுத்துக்கொண்டாய் அவன் பொல்லாதவனானான் என்று மறைத்துக்கொண்டாய் உன் கோபத்தை அவன் மண்தான் என்று முயற்சித்தான் மனிதன் தன்னை மூடிக்கொள்ள மதிப்பற்றவனாய் மூடிவிட்டாய் மனிதனை தோல் உடையால் மதிப்புடையவனாய் பலியிட சொன்னாய் பாவத்தை தடுக்க மனிதன் பயங்கரமானான் பலியையும் கெடுக்க நம்பினாய் தீர்க்கதரிசிகளை நயங்காட்டிவிட்டார்கள் நியமித்தாய் நியாயாதிபதிகளை நியாயக்கேடானார்கள் ஏற்றினாய் ராஜாக்களை ஏமாற்றிவிட்டார்கள் நாடினாய் மேய்ப்பர்களை மேய்ந்துப்போட்டுவிட்டார்கள் எடுத்தாய் முடிவை கொடுத்தாய் விடிவை மனிதனை புரிந்துக்கொள்ள மனிதனாய் வாழ் நீ நினைத்த உன் நினைவின் சிறப்பு அதுவே உன் மகத்தான பிறப்பு ஒழிந்தது பாவத்தினால் வந்த மனிதனின் இறப்பு : பொல்லாத மனிதனுக்கு வந்தது வாழ்வின் பொறுப்பு நலிந்த நானிலம் பெற்றது ஓர் நல் நாகரிகம் இதுவே உன் மகத்தான் ராஜரீகம் மாறியது சோகங்கள் மறக்கவா முடியும் உன் மகத்துவங்களை சொன்னால் இந்த உலகமே முடியும் நினைத்தாய் என்னை வெறுத்தாய் விண்ணை வாழ துடித்தாய் என்னில் வந்து உதித்தாய் மண்ணில் இம்மண்ணில் பிறந்த இயேசு உன்னில் பிறக்கவேண்டும் என வாழ்த்தும் நெஞ்சங்கள்

bottom of page